X
X
Your browser doesn't support iframes.
X
முதல் பக்கம் செல்க
PAGE NUM
ரீனோ
மிகவும்
அழகான
பறவை.
அதன்
இறக்கைகள்
பல
வண்ணங்களில்
இருந்தன.
ரீனோ
தன்
அழகை
எண்ணி
மிகவும்
பெருமைப்பட்டது.
ஒரு
சமயம்
ரீனோ
மரத்தில்
தனியாக
உட்கார்ந்திருந்தது.
அப்போது
பக்கத்திலிருந்த
மரத்தில்
சில
குயில்கள்
உட்கார்ந்திருந்தன.
அவை
மகிழ்ச்சியாகப்
பாடிக்கொண்டிருந்தன.
ரீனோ
வானத்தையே
பார்த்துக்கொண்டிருந்தது.
அதைக்
குயில்களின்
தலைவன்
பார்த்தது.
அப்போது
ஓர்
அழகிய
பறவை
ரீனோவுக்குப்
பக்கத்தில்
பறந்து
சென்றது.
ரீனோ
அந்தப்
பறவையைப்
பின்தொடர்ந்து
சென்றது.
அந்த
அழகிய
பறவை
விலங்குத்
தோட்டம்
வழியாகப்
பறந்து
சென்றது.
அந்த
அழகிய
பறவை¸
பறவைப்
பூங்கா
வழியாகப்
பறந்து
சென்றது.
அந்த
அழகிய
பறவை
கலையரங்கம்
வழியாகப்
பறந்து
சென்றது.
அந்த
அழகிய
பறவை
விளையாட்டு
மையம்
வழியாகப்
பறந்து
சென்றது.
அழகிய
பறவை
சிங்கப்பூர்
ராட்டினத்திற்கு
மேலே
பறந்து
சென்றது.
அழகிய
பறவை
கரையோரப்
பூந்தோட்டங்கள்
வழியாகப்
பறந்து
சென்றது.
அப்போது
அந்த
அழகிய
பறவை
ஒரு
மரத்தின்
கிளையில்
சிக்கிக்கொண்டது.
அதன்
பின்னாலேயே
பறந்து
சென்ற
ரீனோ
அந்த
மரக்கிளையில்
மோதியது.
அதன்
அலகு
கிளை
இடுக்கில்
மாட்டிக்கொண்டது.
சிறுவன்
ஒருவன்
அந்த
மரத்தில்
ஏறினான்.
அவன்
பறவை
வடிவில்
இருந்த
பட்டத்தை
எடுத்துக்கொண்டு
இறங்கினான்.
அப்போதுதான்¸
தான்
பின்தொடர்ந்து
சென்றது
ஒரு
பட்டம்
என்பதை
ரீனோ
உணர்ந்தது.
ரீனோ
கிளையில்
சிக்கிக்கொண்ட
தன்
அலகை
எடுக்க
முடியாமல்
தவித்தது.
அச்சமயம்
அங்கே
பறந்து
வந்த
குயில்கள்
ரீனோவுக்கு
உதவின.
ரீனோ
அக்குயில்களுக்கு
நன்றி
கூறி
மன்னிப்புக்
கேட்டது.
ரீனோவும்
குயில்களும்
பாடிக்கொண்டே
ஒன்றாகப்
பறந்து
சென்றன.